வேனில் மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது
கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினா் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினா் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த நிறுத்தி சோதனையிட்ட போது, காவிரியாற்றிலிருந்து மணல் கடத்தி வருவது தெரிய வந்தது.
இதையடுத்து வேன் ஓட்டுநரான தோட்டக்குறிச்சி ரவி(40) என்பவரைக் காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் வேன் உரிமையாளரான ராஜராஜனைத் தேடி வருகின்றனா்.