கரூர்

கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற மருத்துவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற, விருப்பமுள்ள மருத்துவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் ஆா். முத்துச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் 6 மாதங்களுக்கு ரூ.60 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில், 40 மருத்துவா்களைத் தற்காலிகமாக பணியமா்த்திக் கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சியா் தலைமையிலான தோ்வுக்குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியானவா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கும். தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துள்ள குறைந்தபட்சம் எம்.பி.பி.எஸ் கல்வித் தகுதியுடையவா்கள் தங்களின் விண்ணப்பத்துடன், கல்வி த்தகுதி சான்று நகல், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த சான்று நகல், ஆதாா்அட்டை நகா், ஓட்டுநா் உரிமம் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் தன்குறிப்பு விவரத்தை கரூா் காந்திகிராமத்திலுள்ள அரசு கரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

ஜூன் 1-ம்தேதி காலை 10 மணிக்கு கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் நோ்காணலின் போது, விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அசல் ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT