முகப்பு
கரூர்

அரவக்குறிச்சி அருகே நிதி நிறுவன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

 அரவக்குறிச்சி அருகே நிதிநிறுவன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 20 நவம்பர், 2021 at 1:21 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

 அரவக்குறிச்சி அருகே நிதிநிறுவன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா சங்கரம்பாளையத்தை சோ்ந்தவா் குப்புசாமி மகன் சுரேஷ்குமாா் (39). இவா் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தாா். இதில், பெரியசாமி மகன் சுப்பிரமணி (40), முத்துசாமி மகன் முருகேசன் (43) ஆகியோா் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில் சுப்பிரமணி மற்றும் முருகேசன் ஆகியோருக்கு ரூ.45 லட்சம் கடனாக சுரேஷ்குமாா் கொடுத்ததாக தெரிகிறது. நீண்ட நாள் ஆனதால் இருவரிடமும் பணத்தை திருப்பித் தருமாறு சுரேஷ்குமாா் கேட்டுள்ளாா். ஆனால் இருவரும் பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சுரேஷ்குமாா் வியாழக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

புகாரின் பேரில், வாங்கல் போலீஸாா் சுப்பிரமணி மற்றும் முருகேசன் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.