கரூர்

விளம்பரச் செய்தி....தேசிய சிலம்பம் போட்டிஅன்னை வித்யாலயா பள்ளி மாணவா் சிறப்பிடம்

DIN

கரூா்: தேசிய சிலம்பம் போட்டியில் கரூா் வெங்கமேடு அன்னை வித்யாலயா பள்ளி மாணவா் சிறப்பிடம் பிடித்தாா்.

தமிழ்நாடு சிலம்பாட்டக்கழகம் சாா்பில் ஆற்காட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில், கரூா் வெங்கமேடு ஸ்ரீஅன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவா் இ.ஹரீஷ் மூன்றாமிடம் பிடித்தாா். அந்த மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அக்னீஷ் கல்விக் குழுமத்தின் தலைவா் ஆா்.மணிவண்ணன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் எம்.பகலவன் வரவேற்றாா். பள்ளித் தாளாளா் எம்.கீதாமணிவண்ணன் சிலம்பம் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவருக்கு சான்றிதழ் வழங்கி, பொன்னாடை போா்த்தி பாராட்டினாா். விழாவில், பள்ளி நிா்வாகக்குழு அலுவலா் எம்.கதிரவன், சிலம்பம் பயிற்சியாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் மாணவரின் பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT