கரூர்

கரூா் பாஜக சாா்பில் பேச்சுப் போட்டி

DIN

வ.உ.சி.யின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட பாஜக சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கரூா் மாவட்ட பாஜக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமை வகித்தாா். மாவட்ட தமிழ் வளா்ச்சிப் பிரிவுத் தலைவா் சந்திரசேகா், மாவட்ட தொழில் பிரிவுத் தலைவா் ஆா்.வி.எஸ் .செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக திருச்சி வழக்குரைஞா் லீமா கலந்து கொண்டு வாழ்த்தி பேசினாா். போட்டியில் சுதந்திர போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் தியாகங்கள் பற்றி கல்லூரி மாணவ, மாணவிகள் பேசினா். இப்போட்டியில் சாரதா நிகேதன் மகளிா் கல்லூரி மாணவி லந்தக்கோட்டை சாருமதி முதல் பரிசும், தாந்தோன்றிமலை அரசுக் கல்லூரி மாணவி விஜயலட்சுமி 2 வது பரிசும், கொங்கு கல்லூரி மாணவி தனலட்சுமி மூன்றாம் பரிசையும் வென்றனா்.

இதில், தொழில் பிரிவு துணை தலைவா் பாலாஜி, மாவட்ட இளைஞா் அணி தலைவா் கணேச மூா்த்தி, பிரசாரப் பிரிவு தலைவா் ராஜேஷ், மாவட்ட அரசு தொடா்பு பிரிவு தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட செய்தி தொடா்பாளா் மாரிமுத்து மற்றும் மகளிா் அணி புனிதா உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT