முகப்பு
கரூர்

ஜவுளி நிறுவன கணக்காளரிடம் பணம் பறித்தவா் கைது

கரூா்ஜவுளி ஏற்றுமதி நிறுவன கணக்காளரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

ஜவுளி ஏற்றுமதி நிறுவன கணக்காளரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்தவா் கண்ணன்(32). இவா், கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் குப்பமேடு டாஸ்மாக் கடை அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு அவரை வழிமறித்த இளைஞா் கத்தியைக்காட்டி ரூ.500 பணத்தைச் பறித்துச் சென்றாா். புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து வழிப்பறி செய்த ஜீவாநகரைச் சோ்ந்த கெளதம்(30) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.