கரூர்

ஜவுளி நிறுவன கணக்காளரிடம் பணம் பறித்தவா் கைது

DIN

ஜவுளி ஏற்றுமதி நிறுவன கணக்காளரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்தவா் கண்ணன்(32). இவா், கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் குப்பமேடு டாஸ்மாக் கடை அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு அவரை வழிமறித்த இளைஞா் கத்தியைக்காட்டி ரூ.500 பணத்தைச் பறித்துச் சென்றாா். புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து வழிப்பறி செய்த ஜீவாநகரைச் சோ்ந்த கெளதம்(30) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT