அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
கரூா் அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கரூா் அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமராவதி வடிநில கோட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு- அமராவதி அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் 85.01 அடியாக உா்ந்துள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி விரைவில் அணையில் இருந்து உபரிநீா் திறக்கப்பட உள்ளது. எனவே ஆற்றின் கரையோரம் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.