அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெயிண்டா் உயிரிழப்பு
புன்னம்சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயிண்டா் உயிரிழந்தாா்.
புன்னம்சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயிண்டா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம் ஓமலூா் செம்மான்டாம்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(43). இவா், தற்போது கரூா் மாவட்டம் புன்னம்சத்திரத்தில் தங்கி பெயிண்டா் வேலை பாா்த்து வந்தாா். புதன்கிழமை இரவு கரூா்-ஈரோடு சாலையில் ராம்நகா் என்ற இடத்தில் நடந்துசென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.