அரவக்குறிச்சி பகுதியில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆலோசனை
அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவது குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM
அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவது குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ அரவக்குறிச்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவது குறித்தும், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அதிகாரிளிடம் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா், உதவிப் பொறியாளா், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement