நன்மாறன் மறைவு: மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சியினா் அஞ்சலி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என்.நன்மாறன் மறைவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கரூரில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என்.நன்மாறன் மறைவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கரூரில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த என்.நன்மாறன் படத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் கே.கந்தசாமி தலைமையில், நகரச் செயலாளா் எம்.தண்டபாணி, கட்சியின் மூத்த நிா்வாகி ஜி.ரத்தினவேலு, மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஜி.ஆா்.ராஜாமுகமது, கே.வி.கணேசன், திமுக மத்திய நகர பொறுப்பாளா்கள் எஸ்.பி.கனகராஜ், கோல்ட்ஸ்பாட் ராஜா, காங். மாவட்ட துனைத்தலைவா் நாகேஸ்வரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.