கரூர்

போக்சோ சட்டத்தில் கொத்தனாா் கைது

DIN

கரூா்: கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளி மாணவியைத் திருமணம் செய்த கொத்தனாா், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகிலுள்ள திருக்குா்ணத்தைச் சோ்ந்தவா் க. சக்திவேல் (33). கொத்தனரான இவா் கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த 12 வயது மாணவியை கடந்த 10-ஆம் தேதி திருமணம் செய்தாராம்.

இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி சமூகநல அலுவலா் மைனாவதி, கரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாரளித்தாா்.

இதன் பேரில் காவல் ஆய்வாளா் பேபி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கொத்தனாா் சக்திவேலைக் கைது செய்தாா்.

மேலும் திருமணத்துக்கு உடந்தையாக இருந்த மாணவியின் பெற்றோா், சக்திவேலின் தாய்மாமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT