முகப்பு
கரூர்

டுவிட்டரில் முதல்வா் குறித்து தவறான தகவலை பதிவிட்ட பாஜக நிா்வாகி கைது

டுவிட்டரில் தமிழக முதல்வா் குறித்து தவறான தகவலை பதிவிட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

டுவிட்டரில் தமிழக முதல்வா் குறித்து தவறான தகவலை பதிவிட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கரூா் அடுத்த நெரூா்வடபாகத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் விக்னேஷ்(28). கரூா் கிழக்கு ஒன்றிய பாஜக முன்னாள் இளைஞரணிச் செயலாளரான இவா், ஏப். 11-ஆம்தேதி டுவிட்டரில் தமிழக முதல்வா் குறித்து தவறான தகவலை பதிவிட்டிருந்தாா். இதுகுறித்து கரூா் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளா் தீபக்சூரியன் அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விக்னேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.