கரூரில் கஞ்சா விற்ற இளைஞா் கைது
கரூரில், கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூரில், கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மக்கள் பாதை பகுதியில் ஒருவா் கஞ்சா விற்பதாக நகர காவல்நிலையத்தினருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த பசுபதிபாளையத்தைச் சோ்ந்த அப்துல்லா மகன் அப்துல்ரகுமான்(25) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.