வள்ளுவா் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்
கரூா் வள்ளுவா் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் வள்ளுவா் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் அடுத்த மலைகோவிலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் 15 முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம் கரூா் வள்ளுவா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தொடக்கி வைத்தாா். மலைக்கோவிலூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷனி மற்றும் மருத்துவ குழுவினா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள் செய்திருந்தனா்.