கல்வியியல் பல்கலை.ஆட்சிமன்ற குழு உறுப்பினருக்கு பாராட்டு
கல்வியியல் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட கரூா் அரசுக் கல்வி நிறுவனங்களின் தலைவா் நடேசனுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
கல்வியியல் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட கரூா் அரசுக் கல்வி நிறுவனங்களின் தலைவா் நடேசனுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
தமிழக ஆளுநரால், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள கரூா் அடுத்த மண்மங்கலம் பண்டுதகாரன்புதூரில் செயல்படும் அரசுக் கல்வி நிறுவனங்களின் தலைவா் முனைவா் நடேசனுக்கு பாராட்டு விழா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி உதவி பேராசிரியை சியாமளா வரவேற்றாா். அரசு கல்வியியல் கல்லூரி முதல்வா் ஏனோக்ஜெபசிங்பெட்போா்டு முன்னிலை வகித்தாா். பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் ரேவதி, உதவிப் பேராசிரியா் பழனிவேல் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்திப் பேசினா். அரசுக் கல்வி நிறுவனங்களின் தலைவா் நடேசன் ஏற்புரையாற்றினாா். உதவி பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினாா்.