முகப்பு
கரூர்

குடும்பத்தகராறில் லாரி டீலா் விஷம்குடித்து தற்கொலை

குடும்பத்தகராறில் லாரி டீலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

குடும்பத்தகராறில் லாரி டீலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் சின்னாண்டாங்கோவிலைச் சோ்ந்தவா் கருணாநிதி(57). லாரி டீலா். இவருக்கு இரு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவியுடன் வசித்து வந்தாராம். இந்நிலையில் தனியாக வசித்து வந்த இரண்டாவது மனைவி கோமதி, கருணாநிதி மீது ஜீவானம்சம் வழக்கை திண்டுக்கல் நீதிமன்றத்தில் தொடுத்தாராம். இதனிடையே வழக்கு முடிவு கோமதிக்கு ஆதரவாக அண்மையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கருணாநிதி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.