முகப்பு
கரூர்

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ். பி. ஆய்வு

கரூா் மாநகராட்சி தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

கரூா் மாநகராட்சி தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் ஆய்வு செய்தாா்.

கரூா் மாநகராட்சிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடமான மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு பெறும் இடம், வேட்புமனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சியினா் 100 மீட்டா் தொலைவில் நிற்கும் வகையில் சாலையில் வெள்ளை நிற கோடு போடுதல் போன்ற பணிகளை செய்வதற்குரிய இடங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அலுவலக வளாகத்தில் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் தடுப்பு வேலிகள் அமைத்தல் மற்றும் பழைய அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வாகனங்கள் ஏதும் செல்லாதவாறு தடுப்பு வேலி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரனுடன் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.