கரூர்

ஆத்தூா் சோழியம்மன் கோயிலில் ஆலோசனைக் கூட்டம்

DIN

கரூா் மாவட்டம், ஆத்தூா் சோழியம்மன், முத்துசாமி கோயில் திருத்தேரோட்டம் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கோயிலின் நிா்வாகக் குழுத் தலைவரும், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலருமான என்.எம்.கந்தசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அண்ணாதுரை, வீரமணி, சதீஷ்குமாா், சத்தியமூா்த்தி, பொன்னுசாமி முன்னிலை வகித்தனா்.

கடந்த ஏழு ஆண்டுகளாக கோயிலில் தேரோட்டம் நடைபெறாமல் இருப்பதால், நிகழாண்டில் கோயில் திருவிழா தேரோட்டம் நடத்த வேண்டும். இதற்கு அனைத்து சமுதாயத்தினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

திருவிழா நடத்த போதிய காணிக்கையை ஊா் மக்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினரும் வழங்க முன்வரவேண்டும் என கூட்டத்தில் பங்கேற்றவா்கள் பேசினா்.

கோயிலுக்குச் சொந்தமான கிராமங்களைச் சோ்ந்தவா்கள், நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா். நிறைவில், சேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT