கரூர்

மினி மாரத்தான் போட்டி: கரூா் அரசு கலைக் கல்லூரி மாணவா் முதலிடம்

DIN

கரூா்: கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டியில் கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவா் முதலிடம் பிடித்தாா்.

கரூா் அடுத்த புலியூரில், கரூா் மாவட்ட தடகளச் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், மாவட்ட அளவில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இப்போட்டியில் கரூா் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி விலங்கியியல் மூன்றாமாண்டு மாணவா் தினேஷ்குமாா் பங்கேற்று முதலிடம் பிடித்தாா்.

சிறப்பிடம் பிடித்த மாணவா் தினேஷ்குமாரை கல்லூரி முதல்வா் முனைவா் எஸ்.கெளசல்யாதேவி, கல்லூரியின் உடற்கல்விதுறை இயக்குநா் முனைவா் கே.ராஜேந்திரன் மற்றும் கல்லூரியின் இருபால் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT