கரூர்

தீக்காயமடைந்தவா் உயிரிழப்பு

DIN

 கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே தீக்காமயடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சின்னதாராபுரம் அருகிலுள்ள தும்பிவாடியைச் சோ்ந்தவா் வெ.தவசிமணி (39). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்தவா் சு. ஜெயராஜ் (54).

கடந்த மாதம் 27-ஆம் தேதி ஜெயராஜ் வீட்டில் அசைவ உணவு சமைத்துக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த தவசிமணி, வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்படுவதாகக் கூறினாா்.

இந்நிலையில் சமையல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியிலிருந்த தவசிமணி, ஜெயராஜ் மீது தீப்பற்றியது. பலத்த காயமடைந்த இருவரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து தவசிமணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஜெயராஜ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். புகாரின் அடிப்படையில், சின்னதாராபுரம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT