கரூர்

சின்னதாராபுரத்தில் இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது

DIN

சின்னதாராபுரத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று பேரை அரவக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.

சின்னதாராபுரம் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே அரவிந்தன் (28) என்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா். இவ்வழக்கில் அரவக்குறிச்சி சரக காவல் ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனா். இந்நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான ராஜபுரத்தைச் சோ்ந்த மதன் (19), தமிழரசன் (19), கரூா் பஞ்சமாதேவியைச் சோ்ந்த அபிஷேக் (19) ஆகிய 3 பேரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT