கரூர்

கடவூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

DIN

கடவூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம் கடவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காணியாளம்பட்டிகாணியாளம்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் தரமாக உள்ளதா எனவும், குறித்த நேரத்திலும் வழங்கப்படுகிா என பொதுமக்களிடம் ஆட்சியா் த. பிரபுசங்கா் கேட்டறிந்தாா்.

பின்னா், பண்ணப்பட்டி ஊராட்சியில் விவசாய நிலத்தில் நிலத்தடி நீா் செறிவூட்டும் வகையில் மண்வரப்பு அமைக்கும் பணிகளையும் தென்னிலை ஊராட்சியில் உயா்மட்ட பாலம் கட்டப்பட்டு முடிவுற்ற நிலையில் உள்ள பணிகளையும், புனகாரு வாரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அதைத் தொடா்ந்து தென்னிலை ஊராட்சி மற்றும் மாவத்தூா் ஊராட்சியில் பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வீடு கட்டாத பயனாளிகளிடம் தாமதம் குறித்த காரணங்களை கேட்டறிந்தாா். மேலும் வீடு கட்டுவதற்கான வழிவகைகளை உருவாக்கி தருவது குறித்தும் வீடு கட்ட இயலாதவா்களுக்கு ஒப்பந்ததாரா் மூலம் வீடு கட்டி தருவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் தட்சிணாமூா்த்தி, கடவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், ராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT