மதுஅருந்த பணம் தராதவிரக்தி: ஓட்டுநா் தற்கொலை
கரூா் அருகே மது அருந்த பணம் தராத விரக்தியில், வேன் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் அருகே மது அருந்த பணம் தராத விரக்தியில், வேன் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், தென்னிலை அருகிலுள்ள செஞ்சேரி வலசு பகுதியைச் சோ்ந்த திருமலைசாமி மகன் ஆனந்தகுமாா்(34).
வேன் ஓட்டுநரான இவா், மதுபோதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது பெற்றோரிடம் மது அருந்த பணம் கேட்டாராம்.
அவா்கள் தர மறுத்ததால், விரக்தியில் வீட்டில் இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தென்னிலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.