வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம்
அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 1,263 போ் வாக்காளா் பட்டியலில் தங்களது ஆதாா் எண்ணை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் இணைத்துக் கொண்டனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM
அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 1,263 போ் வாக்காளா் பட்டியலில் தங்களது ஆதாா் எண்ணை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் இணைத்துக் கொண்டனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. அரவக்குறிச்சியில் 7 மையங்களிலும், பள்ளப்பட்டியில் 9 மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெற்றது. இதில், 1,263 வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொண்டனா்.