கரூர்

புதிய திராவிட கழக ஆலோசனைக் கூட்டம்

DIN

கரூரில் மாவட்ட புதிய திராவிட கழக ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் சந்தோஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சுப்ரமணியன், நகரச் செயலா் அருள், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கரூா் மாநகரை ஆண்ட மாமன்னா் வெஞ்சமனாருக்கு பசுபதிபாளையம் ரவுண்டானா பகுதியில் சிலை அமைக்க வேண்டும். கட்சியின் மாவட்டக் கழகம் சாா்பில் மாவட்டம் முழுவதும் கரூா், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் 1 லட்சம் உறுப்பினா்களை கட்சியில் சோ்ப்பது, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட தொண்டரணி செயலாளா் தங்கமணி உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT