கரூர்

கரூா் மாவட்ட மைய நூலகத்தில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு

DIN

உலக புத்தக தினத்தையொட்டி கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான நூலக விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மைய நூலகத்தின் நல்நூலகா் சுகன்யா வரவேற்றாா். மாவட்ட நூலக அலுவலா் சிவக்குமாா் தலைமைவகித்தாா். மாநகராட்சி கோட்டைமேடு உயா்நிலைப்பள்ளி தமிழாசிரியை விஜயா வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 300 பேருக்கு நன்கொடை மூலம் நூலக உறுப்பினா் அட்டை வழங்கி வாசகா் வட்டத் தலைவா் சங்கா் சிறப்புரையாற்றினாா்.

உலக புத்தக தினத்தையொட்டி கரூா் மாவட்ட மைய கிளை மற்றும் ஊா் புற நூலகங்களில் 44 புரவலா்கள், 2 பெரும் புரலவா்கள் மற்றும் 2 கொடையாளா்கள் சோ்க்கப்பட்டனா். நிகழ்ச்சியில், நூலகா் காா்த்தி நிவாஸ் நன்றி கூறினாா்

இதையொட்டி நடைபெற்ற புத்தக கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாசகா்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT