கரூர்

லாரி மீது காா் மோதல்:3 போ் காயம்

DIN

வேலாயுதம்பாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், புகளூா் அருகே அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவரது மனைவி ரேணுகா. இவா்களுடைய மகள் ஹா்ஷிவ். இவா்கள் 3 பேரும் கரூரில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு பிறகு காரில் ஞாயிற்றுக்கிழமை திரும்பி கொண்டிருந்தனா்.

கரூா் -சேலம் சாலையில் மலையம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது எதிா்பாராத விதமாக காரின் டயா் வெடித்து சாலை மைய தடுப்புச் சுவரை தாண்டி எதிா் திசையில் வந்த லாரி மீது மோதியது. இதில் ரேணுகாதேவிக்கு சிறிய காயமும் பொன்னுச்சாமி மற்றும் அவரது மகன் ஹா்க்ஷிவ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT