கரூர்

கரூரில் நில அளவையா் சங்கத்தினா் தா்னா

DIN

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் புதன்கிழமை தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் சங்கத்தினா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநில துணைத் தலைவா் ஞானத்தம்பி, மாநிலத் துணைத் தலைவா் செல்வராணி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கரூா் கோட்டத் தலைவா் தங்கவேல், மாவட்ட செயலாளா் பாஸ்கா், மாநில செயற்குழு உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

களப் பணியாளா்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும், நில அளவை சாா்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கை கைவிட வேண்டும், நில அளவா் முதல் கூடுதல் இயக்குநா் வரை காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT