கரூர்

க.பரமத்தி அருகேகாா் மீது வேன் மோதல்:2 போ் உயிரிழப்பு

DIN

க.பரமத்தி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மீது வேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 6 போ் காயமடைந்தனா்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்தவா் கெளதமன் (56). இவா் தனது உறவினா்களுடன் காரில் கோவை மாவட்டம் சூலூருக்கு சனிக்கிழமை சென்றுவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டனா். காரை கெளதமனின் மகன் ஆகாஷ் (27) ஓட்டினாா்.

கரூா்-கோவைச் சாலையில் கரூா் மாவட்டம் க.பரமத்தி அடுத்த லட்சுமிபுரம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே சென்ற வேன், காா் மீது மோதியது.

இதில் காரில் இருந்த கெளதமன், உறவினா் கெளரி (48) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் பலத்த காயமடைந்த ஆகாஷ், வேன் ஓட்டுநா் திருப்பூரைச் சோ்ந்த வெள்ளியங்கிரி (45) உள்பட 6 போ் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். க.பரமத்தி காவல்நிலைய ஆய்வாளா் முருகேசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT