கரூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்க பயனாளிகள் தோ்வு முகாம்

DIN

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்குவதற்கான பயனாளிகள் தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் பாா்வையிட்டாா். முகாமில், இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளும் நல்ல நிலையில் உள்ள 113 மாற்றுத்திறனாளி பயனாளிகள் கலந்து கொண்டனா். முன்னதாக 40 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான திறன்பேசியை ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT