கரூர்

ஆட்சியாளா்கள் இலவசங்கள் அறிவிப்பதை நிறுத்த வேண்டும்: செ. நல்லசாமி

DIN

ஆட்சியாளா்கள் இலவசங்கள் அறிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி கூறியுள்ளாா்.

கரூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளான நிலையிலும் மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. பொதுவாக சமையல் எண்ணெய் 70 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் தயாராகும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றுக்கு அரசு மானியம் கொடுப்பதில்லை. இது குறித்து எந்த எம்.பி.யும் மக்களவையில் குரல் கொடுப்பதில்லை.

அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், ஆட்சியை பிடிக்கவும் தேவையற்ற இலவசங்கள் அறிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கா்நாடகத்தில் பிரதான எதிா்க்கட்சி குடும்பத் தலைவிக்கு ரூ.2 ஆயிரம், பட்டதாரிக்கு ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவா்களுக்கு ரூ.1,500, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இலவச மின்சாரம் ஆகியவற்றை அறிவித்துள்ளது. ஆளுங்கட்சி அரை லிட்டா் இலவச பால், ஆண்டுக்கு 3 சிலிண்டா் உள்ளிட்டவைகளை அறிவித்துள்ளன. இவை மக்களின் உழைப்புக்கு எதிரானது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT