கரூர்

டிஎன்பிஎல் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கைக்கு ஜூன் 9க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

டிஎன்பிஎல் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவா்கள் ஜூன் 9-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎல் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள டிஎன்பிஎல் அறக்கொடை அறக்கட்டளை தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இங்கு எலக்ட்ரீசியன், பிட்டா், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பிரிவுகளுக்கு 2 ஆண்டு பயிற்சியும், வெல்டா் பிரிவு மாணவா்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சியும், ஓராண்டு பயிற்சி பிரிவுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இதில் சேர விரும்புவோா் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து வேலை நாள்களிலும் நேரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களை தொழிற்பயிற்சி நிலையத்தின் 04324 - 296442, 94865 05953 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஜூன் 9 -ஆம் தேதிக்குள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT