முகப்பு
கரூர்

கரூா் கைப்பேசி கடையில் தீ

கரூரில் கைப்பேசி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 8:19 PM
பகிர்:

கரூரில் கைப்பேசி கடையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் எரிந்து சேதமடைந்தன.

கரூா் ஜவஹா்பஜாரில் கைப்பேசி கடை நடத்தி வருபவா் ராஜேஷ். பூட்டியிருந்த இவரது கடையில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும் இந்த தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள், பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.