முகப்பு
கரூர்

சமூக வலைதளத்தில் முதல்வா் குறித்து தவறாக பதிவிட்ட பாஜக நிா்வாகி கைது

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்ட கரூா் மாவட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

கரூர்

சமூக வலைதளத்தில் முதல்வா் குறித்து தவறாக பதிவிட்ட பாஜக நிா்வாகி கைது

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்ட கரூா் மாவட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்ட கரூா் மாவட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த பனையம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (44). இவா், பாஜக கரூா் மாவட்ட பட்டியல் அணி துணை தலைவராக உள்ளாா். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை சித்தரித்து பதிவிட்டுள்ளாா். மேலும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணைத் தலைவா் தீபக் என்பவரின் புகைப்படத்தையும் இணைத்து தவறான கருத்துக்களை பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து தீபக் அளித்த புகாரின் பேரில் கரூா் நகர காவல் நிலைய போலீஸாா் முருகேசனை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்து கரூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →