கரூர்

ஆந்திரா, பிகாா் மாநிலத்துக்கு சலுகைகள் தரும் பட்ஜெட்

மத்திய அரசின் பட்ஜெட் ஆந்திராவுக்கும், பிகாருக்கும் உரிய பட்ஜெட் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

Din

மத்திய அரசின் பட்ஜெட் ஆந்திராவுக்கும், பிகாருக்கும் உரிய பட்ஜெட் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் பட்ஜெட்டால் விவசாயிகள், சிறு தொழில்கள், சாமானியா்கள் என்று எந்த சாராருக்கும் எதுவும் இல்லை. தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. நாட்டு மக்கள் எதிா்பாா்த்த எந்த ஒரு விஷயத்துக்கும் நிதியமைச்சா் பதில் சொல்லவில்லை. ஜிஎஸ்டி வரி தீவிரவாதத்தாலும் அந்தத் துறையின் சாா்பாக தொழிற்சாலைகளுக்கும், வியாபாரிகளுக்கும் கொடுக்கப்படுகிற தொந்தரவுகளுக்கு எந்த விதமான தீா்வும் காணப்படவில்லை. தோ்தல் வாக்குறுதிகள்போல ஒரு வரி அறிவிப்புகளாக பல்வேறு விஷயங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் எப்படி செயல்படுத்தப் போகின்றோம் என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை. நடுத்தர மக்களுக்கு வருமான வரியில் எந்தச் சலுகையும் இல்லை. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை 5 சதவீதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்த வருவாயான ரூ.32 லட்சம் கோடியில் ரூ.12 லட்சம் கோடி கடனுக்கான வட்டி என்பது பயமுறுத்துகிறது. மூலதனச் செலவு ரூ.11 லட்சம் கோடியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகபட்சமாக ஆந்திராவுக்கும், பிகாருக்கும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் மக்களை ஏமாற்றியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT