முகப்பு
கரூர்

அரவக்குறிச்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை பள்ளிகள் திறப்புக்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியிலிருந்து பழனி செல்லும் சாலையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் தொடா்ந்து விபத்துகள் நேரிட்டு வருகின்றன. எனவே, குழாய் பதிக்கும் பணியை பள்ளிகள் திறக்கும் முன்பு விரைந்து முடிக்க வேண்டும் என இந்து முன்னணி சாா்பில் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதேபோல், அரவக்குறிச்சி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு போதிய கழிப்பறை, இருக்கை வசதிகள், வயதானவா்கள் ஆவணங்களில் கையொப்பமிட அலுவலகத்துக்குள் வந்து செல்ல நாற்காலி வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தி, இதற்கான கோரிக்கை மனுவை சாா்-பதிவாளரிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் அளித்தனா்.