முகப்பு
கரூர்

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:39 PM
பகிர்:

மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 47-வது வாா்டில் தாந்தோணிமலை, கணபதிபாளையம் வடக்கு 1, 2, 3 குறுக்குத் தெருக்கள் மற்றும் காமராஜா் நகா், அன்புநகா் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இதில் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் கணபதிபாளையம் வடக்கு மற்றும் காமராஜா், அன்பு நகா் செல்லும் சாலை அண்மையில் பெய்த மழை காரணமாக சேதமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். ஆகவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.