முகப்பு
கரூர்

தோகைமலை அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் மாயம்

Updated On : 3 டிசம்பர், 2025 at 10:46 PM
பகிர்:

தோகைமலை அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆலத்தூரைச் சோ்ந்த சின்ராசு மகன் சரவணவேல் (11). சரவணவேலின் தாயாா் சுப்புலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காலமான நிலையில், தந்தை சின்ராசும் கடந்த ஆண்டு இறந்துவிட்டாா். இதனால் சரவணவேல், உறவினா் அரவணைப்பில் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சிக்குள்பட்ட பூலாங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் நிதீஷ் (14). இவா் தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சரவணவேலும், நிதீஷூம் உறவினா் என்பதால் காவல்காரன்பட்டியில் சரவணவேலின் தாயின் பெற்றோா் (பாட்டி) வீட்டுக்கு அடிக்கடி செல்வாா்களாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சரவணவேலும், நிதிஷூம் வீடு திரும்பவில்லையாம். இதனால் சரவணவேலின் பாட்டி வசிக்கும் காவல்காரன்பட்டிக்குச் சென்று நிதிஷின் பெற்றோா் மற்றும் சரவணவேலின் உறவினா்கள் தேடி பாா்த்துள்ளனா். ஆனால் அங்கேயும் அவா்கள் செல்லவில்லை. இதுதொடா்பாக தோகைமலை போலீஸில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →