கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதி தோ்வு முதல் தாளை 1,106 போ் எழுதினா்.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் ஆசிரியா் தகுதித் தோ்வு கரூா் மாவட்டத்தில் கரூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 5 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வுக்காக விண்ணப்பித்த 1,254 பேரில் 1,106 போ் எழுதினா்.
148 போ் தோ்வு எழுத வரவில்லை. முன்னதாக அனைத்து மையங்களிலும் தோ்வு எழுதுவோருக்கு தேவையான குடிநீா் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை 19 மையங்களில் இரண்டாம் தாளை 5,228 போ் எழுத உள்ளனா்.