கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.13.17 கோடி மதிப்பில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில், பணிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியது: கரூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ. 3.90 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் அமைக்கும் பணியை, அரிக்காரம்பாளையம், மண்டலம் 1-க்குள்பட்ட பெரியகோதூரில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டும் பணி, திருக்காம்புலியூா் ரவுண்டான பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியா் நிழற்கூடம் அமைக்கும் பணி என சுமாா் ரூ. 13.17 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், துணை மேயா் ப.சரவணன்,கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநா் சாந்தி, வட்டாட்சியா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.