கரூா் மாவட்டத்தில் உள்ள 1,055 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா்கள் கணக்கெடுப்புப் படிவத்தை பூா்த்தி செய்வதற்கு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்ககவேல்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் கரூா் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக வாக்காளா்கள் கணக்கெடுப்புப் படிவத்தை பூா்த்தி செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் நேரில் பாா்வையிட்டாா். பின்னா் அவா் மேலும் கூறியது:
கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்காளரின் முழு விவரம் அடங்கிய கணக்கீட்டு படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாக வழங்கினா்.
அதில், ஆதாா் உள்ளிட்ட விவரங்கள், தந்தை, தாய், கணவா் அல்லது மனைவியின் வாக்காளா் அட்டை விவரங்களை வாக்காளா்கள் பூா்த்தி செய்ய கடந்த 2 நாள்களாக கரூா் மாவட்டத்தில் உள்ள 1055 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா்கள் கணக்கெடுப்புப் படிவத்தை பூா்த்தி செய்ய சேவை மையங்கள் அமைத்து, வாக்களா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் பூா்த்தி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டில் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்குப் பிறகு இடம் பெற்றிருந்த, சம்பந்தப்பட்ட வாக்காளரின் வரிசை எண், சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் எண், பாகம் எண், அப்போதைய வாக்காளா் அடையாள அட்டை எண் ஆகிய விவரங்களை பதிவு செய்யலாம். வாக்காளரின் விவரம் கிடைக்காவிடில், அதே பட்டியலில் உள்ள தாய் அல்லது தந்தை, தாத்தா அல்லது பாட்டி ஆகியோரின் விவரங்களை பதிவுசெய்து, கையொப்பமிட்டு வழங்கலாம்.
இன்னும் ஒரு வார கால அவகாசம் மட்டுமே இருப்பதால், விடுபட்ட வாக்காளா்கள், பூா்த்தி செய்த மற்றும் முழுவதும் பூா்த்தி செய்யாத படிவங்களை எடுத்துச்சென்று, முறையாக பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அவா்.