கரூரில் திமுக முன்னாள் எம்.பி.யிடம் முதல்வா் நலம் விசாரிப்பு
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்களவை முன்னாள் உறுப்பினா் கே.சி. பழனிசாமியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்களவை முன்னாள் உறுப்பினா் கே.சி. பழனிசாமியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியில் புதன்கிழமை காலை பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் கரூருக்கு காலை 11.45 மணிக்கு வந்தாா். அப்போது, அவா் கரூா் மக்களவை முன்னாள் உறுப்பினரும், திமுகவின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராகவும் இருந்த கே.சி. பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.
இந்தச் சந்திப்பின்போது மேற்கு மண்டல திமுக பொறுப்பாளா் வி. செந்தில்பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.