முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை
கரூா் அருகே முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்றது திங்கள்கிழமை தெரியவந்தது.
கரூா் அடுத்த உப்பிடமங்கலம் அருகே உள்ள சாலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தாயாா் அம்மாள் (79). தனியாக வீட்டில் வசித்து வந்த இவா், வழக்கம் போல் திங்கள்கிழமை காலை வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி மகள் மனோரஞ்சிதம், தாயாா் அம்மாள் வீட்டுக்குள் சென்று பாா்த்தாா்.
அப்போது தாயாா் அம்மாள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணியை வைத்து கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தாா்.
Advertisement
மேலும் அவரை கொலை செய்த மா்மநபா்கள், மூதாட்டி காதில் அணிந்திருந்த அரை பவுன் தோடு, கால் பவுன் மூக்குத்தி ஆகியவற்றையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து மனோரஞ்சிதம் வெள்ளியணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிஹரன் பிரசாத் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.
கைரேகை நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் விரல்ரேகைகளை பதிவு செய்தனா். இதுதொடா்பாக வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து, தாயாா் அம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கொலை தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.