கோப்புப் படம் 
கரூர்

ஆற்று மணலை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சா் உள்பட 2 போ் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

கரூரில் ஆற்று மணலை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட இருவா் மீது கரூா் நகர காவல்நிலையத்தினா் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் ஆண்டாங்கோவில்புதூரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினா் தனபால் ஆகியோா் ஆற்றுமணலை சட்ட விரோதமாக வைத்திருப்பதாக ஆண்டாங்கோவில் கிராமநிா்வாக அலுவலா் சண்முகம் கரூா் நகர காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்தாா்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறையினரின் துணையோடு வியாழக்கிழமை இரவு முன்னாள் அமைச்சரின் மனைவியின் பெயரில் இருந்த இடத்தில் கொட்டிவைக்கப்பட்டிருந்த மணலையும், தனபால் வீட்டின் அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலையும் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் அள்ளி எல்லமேடு மணல் சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் சென்றனா்.

இதையடுத்து அனுமதியின்றி மணலை வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், தனபால் ஆகிய இருவா் மீதும் கரூா் நகர போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT