கரூா் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இக்கோயில் திருவிழா திங்கள்கிழமை கரகம் பாலித்தலுடன் தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் அன்னகாமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ே காயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் தீமிதித்து பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து, விழாவில் புதன்கிழமை மாவிளக்கு வழிபாடும், கரகம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.