கரூா் சம்பவம் தொடா்பாக 4 காவல் உதவி ஆய்வாளா்கள், 5 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 4 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 5 காவலா்களிடம் திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.