கரூரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 6.27 லட்சம் பறிமுதல்
கரூரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 6.27 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கரூரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 6.27 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
கரூா் தோ்தல் பறக்கும்படை அலுவலரும், வட்டாரக் கல்வி அலுவலருமான சகுந்தலா தலைமையிலான பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை இரவு மொச்சக்கொட்டாம்பாளையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், காரில் கரூா் பெரியகுளத்துப்பாளையத்தைச் சோ்ந்த துரைமுருகன் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த பணம் ரூ.6,27,850 ஐ பறிமுதல் செய்தனா். பின்னா் பணத்தை கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்தப் பணம் கரூா் உதவி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.