முகப்பு
கரூர்

கரூரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

கரூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:39 PM
பறிமுதல்
பகிர்:

கரூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூரில் வெங்கக்கல்பட்டி சின்னம்மநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலரும், வட்டாரக் கல்வி அலுவலருமான சகுந்தலா தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினா் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே காரில் வந்த குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்த சந்திரன் உரிய ஆவணங்கள் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து, கரூா் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், கரூா் வட்டாட்சியருமான மோகன்ராஜிடம் ஒப்படைத்தனா். பின்னா் அப் பணம் கரூா் உதவி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.