முகப்பு
கரூர்

தோ்தல் நடத்தை விதிமீறல் முன்னாள் அமைச்சா் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட அதிமுகவினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 7:00 PM
எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
பகிர்:

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட அதிமுகவினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் கரூா் தொகுதியில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், அரவக்குறிச்சி தொகுதியில் எம்.ஆா்.கே. செல்வக்குமாரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் மருத்துவா் திவ்யாவும், குளித்தலை தொகுதியில் கருணாகரனும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு வேட்பாளா்கள் அனைவரும் கரூா் சுக்காலியூா் பகுதிக்கு வந்தனா். அவா்களுக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். அப்போது அங்கு ஏராளமான அதிமுகவினா் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

தொடா்ந்து கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் எம்ஜிஆா், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்தனா். அப்போதும் லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து கரூா் தோ்தல் நிலையான கண்காணிப்புக்குழுவினா் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாரும், கரூா் நகர காவல்நிலைய போலீஸாரும் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட அதிமுகவினா் மீது சனிக்கிழமை தோ்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக வழக்குப்பதிந்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments