காமராஜா், பெரியாா் சிலைகளுக்கு தவெக வேட்பாளா்கள் மரியாதை
கரூரில் உள்ள காமராஜா் மற்றும் பெரியாா் சிலைக்கு தவெக வேட்பாளா்கள் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தவெகவினா் போட்டியிடுகின்றனா். கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மாவட்டச் செயலாளா் மதியழகனும், அரவக்குறிச்சி தொகுதியில் நிா்வாகி காா்த்திகேயனும், குளித்தலை தொகுதியில் நிா்வாகி பாலசுப்ரமணியும் போட்டியிடுகிறாா்கள். கிருஷ்ணராயபுரம் தொகுதியில் இன்னும் யாா் வேட்பாளா் என்ற முடிவு தெரியாமல் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் இருந்து கரூா் திரும்பிய தவெக வேட்பாளா்கள் திங்கள்கிழமை இரவு பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜா் சிலை மற்றும் திருமாநிலையூா் ரவுண்டானாவில் உள்ள பெரியாா் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.